விளக்கவுரையாளரிடம் இருந்து கடிதம்

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே

 நான் கடந்த 30 வருடங்களாக கிறிஸ்துவ சபையில் தன்னார்வ ஊழியம் செய்து வருகிறேன். பிரசங்கம் செய்தல், போதித்தல் மற்றும் மொழிபெயர்ப்பதில் எனது அனுபவத்தைக் கொண்டு, வேதாகமத்தின் புத்தகங்களுக்கு எனது சொந்த விளக்கவுரைகளை எழுத ஆரம்பித்தேன். இது ஒரு எளிய கேள்வி-பதில் வடிவத்தில் உள்ளது. இதைப் படிக்கும் மற்றும் கற்றுக்கொள்ளும் எவருக்கும் எளிதாகப் புரியும் வகையில் எழுதப்பட்டுள்ளது. தேவனுக்குள் நான் ஒரு உறுதிப்பாட்டகி கொண்டுள்ளேன்: ஒவ்வொரு நாளும் எனது முதல் கடமை வேதாகமத்தின் ஒருசில வசனங்களுக்கு விளக்கம் எழுதுவது. இவ்வாறாக, இந்த பூமியில் எனது வாழ்க்கைப் பயணத்தை முடிப்பதற்கு முன், வேதாகமத்தின் அனைத்து புத்தகங்களுக்கும் விளக்கவுரையை எழுதி முடிக்க விரும்புகிறேன்.

இந்த விளக்கவுரைகள் பின்வம் இரண்டு நோக்கங்களைக் கொண்டுள்ளன:

 (1) வேதாமத்தின் ஒவ்வொரு வசனத்திற்கும் இதுபோன்ற கேள்வி பதில் வடிவில் விளக்கவுரை எழுதப்பட வேண்டும். (ப.ஏ. 23,145 + பு.ஏ. 7,957 = மொத்தம் 31,102).

 (2) இந்த விளக்கவுரைகள் அனைத்தும் உலகில் உள்ள சாத்தியமான எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, இந்த உலகில் உள்ள அனைத்து மக்களும் அதைப் படிக்கவும், வேதாகமத்தைப்பற்றிய சிறந்த அறிவைப் பெறவும் இந்த இணையதளத்தில் நேர்த்தியாக பதிவேற்றப்படவேண்டும்.

தேவனுடைய சித்தத்துடன், இந்த விளக்கவுரைகள், இந்த இணையதளத்தின் மூலம் உலகின் எல்லா மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்று நான் ஒரு நோக்கம் கொண்டிருக்கிறேன். இதன் மூலம் உலகில் உள்ள ஒவ்வொரு மக்களும் வேதாகமத்தைப்பற்றியும் அதன் உண்மையான எழுத்தாளராகிய தேவனைப்பற்றியும் நன்கு அறியலாம். இது அவர்கள் அனைவரையும் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவத்திற்குள் கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன்.

 எனது வாழ்நாளின் பெரும்பகுதியை தேவனுடைய இந்த ஊழியத்திற்கென்றே அர்ப்பணித்துள்ளேன். இப்பணியை உலகம் முழுவதும் பரப்புவதற்கு தாராள மனப்பான்மையுள்ள நன்கொடையாளர்களையும் தன்னார்வலர்களையும் நம் தேவன் உருவாக்க வேண்டும் என்று இந்த உன்னத பணிக்காக ஜெபிக்கும்படி உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் தாராளமான பண உதவியால் இந்த உன்னதமான மற்றும் சிறந்த ஊழியத்தை ஆதரியுங்கள்.

 தேவன் நம்மை நம்மை ஆசீர்வதிப்பாராக! ஆமென்!!

 நன்றி

கிறிஸ்தவ அன்பில்

Dr.R.C.ஜோசப் சகாயராஜ் Ph.D.

ஊழியர் - போதகர் - மொழிபெயர்ப்பாளர் - விளக்கவுரையாளர்

கிறிஸ்துவின் சபை

திண்டுக்கல் மற்றும் உலகம் முழுவதும்

 உண்மையான சபை மற்றும் அதன் போதனை பற்றிய அறிவில் எனது வழிகாட்டி மற்றும் ஆற்றுப்படுத்துநருடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படம்:

 

1991 ஏப்ரலில் சகோதரர் ஜிம் இ.வால்ட்ரானை முதலில் சந்தித்தேன். அந்த நேரத்தில் நான் ஒரு புதிய கிறிஸ்தவனாக இருந்தேன், இந்த சகோதரர் ஒரு எளிய மற்றும் ஞானமான கிறிஸ்தவ போதகராக என்னை அனைத்து வழிகளிலும் ஊக்கப்படுத்தினார். அவர் எனக்கு வழங்கிய பிரசங்கித்தல், போதித்தல், (எழுத்துக்களில் மற்றும் பிரசங்கித்தலில்) மொழிபெயர்த்தல் மற்றும் அனைத்து பயிற்சிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

தமிழ்